panjap pennai trailil otha tamil kamakathai

லூதியானாவிலிருந்து தில்லி போகும் ரயிலில் ரங்காவுக்கு முதல் வகுப்பு கூப்பேயில்தான் இடம் கிடைத்தது. அதில் இரண்டே இரண்டு பர்த்துகள்தான் இருந்தன.
அவன் கீழ் பர்த்துதான் ரிசர்வேஷன் செய்திருந்தான். நல்ல வெயில் காலம். வேர்வையைத் துடைத்துக் கொண்டு, அவன் உள்ளே நுழைந்த போது கீழ் பர்த்தில் அவனைவிட நாலு அங்குலம் உயரமான வாட்ட சாட்டமான நடுத்தர வயசான பஞ்சாபிப் பெண்மணி கம்பீரமாக உட்காரந்திருந்தாள்.
அவளோடு இன்னொரு பருத்த இளம் பெண்ணும், நெருக்கமாய் நின்ற ஒரு சர்தார்ஜியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரங்காவுக்கு அவள் அருகே உட்கார சற்று தயக்கமாயிருந்தது.
ரயில் புறப்படும் நேரம் நெருங்கவே அந்த இருவரும் உட்கார்ந்திருந்தவள் காலைத் தொட்டு ‘பயிரிப் போனா பீவிஜி’ என்று வணங்கிவிட்டுப் போனார்கள்.
ரயில் மெதுவாக நகர ஆரம்பித்ததும் அதுவரை நின்று கொண்டிருந்த ரங்காவை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண்மணி உட்காருமாரு சைகை செய்தாள். அவன் உட்கார்ந்ததும் பக்கம் “ஓய் புத்தரு, கித்தே ஜாரியா (ஏய் எங்க போறே)” என்று கரகரத்த குரலில் கேட்டாள்.
ரங்கா அடிக்கடி பஞ்சாப் போய் வருவதால் பஞ்சாபி ஓரளவு புரியும். அவன் தான் சென்னை போவதாக ஹிந்தியில் சொன்னான். “ஓய் தும் இட்லி சாம்பார் வாலா” என்றவள் தோள் குலுங்கச் சிரித்தாள்.

Author: admin