Arasar kalaththu sex kathai

அரிக்கோட்டை அரசர் ராஜாதி ராஜ ராஜ கம்பீர அதி விக்ரம பூபதியின் நாடு பெரியதாக இல்லாவிட்டாலும், அவர் கீர்த்தி பெரியது. அவர் கொடை வள்ளல். அவர் எழுத்தறிவு இல்லாவிட்டாலும், புலவர்களை ஆதரிப்பவர். வங்கக் கடலை ஒட்டிய அந்த நாட்டில் புலிகள் இல்லை என்றாலும் ஏழை விவசாயிகளின் நிலங்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிப் புகழ் பெற்றவர்.
அரிக்கோட்டைக்குக் கடல் கடந்த வாணிகத்தில் பொன்னும் பொருளும் சேரவே அதைத் தொட்டற் போல் இருந்த நான்கு குறுநில மன்னர்களுக்கும் அரிக்கோட்டையின் மீது எப்போதுமே ஒரு பொறாமைக் கண் இருந்தது.
அவர்கள் நால்வரும் அரிக்கோட்டையின் மீது ஒருங்கிணைந்து போர் தொடுக்கத் தயாராகின்றனர் என்று ஒற்றர் படைத்தலைவன் கால்வளைந்த கார்க்கோடன் அரசரிடம் கூறினதும் அவர் என்ன செய்வது என்று திகைத்தார்.
அவர் படைப் பலம் பெரிது என்றாலும் அந்த நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்த போர் தொடுத்தால் ஈடு கொடுக்க முடியாது. போர் நிகழ்ந்தால்
அரிக்கோட்டைதான் நிச்சயம் தோல்வி அடையும்.
ஆகவே கவலையுற்ற அரசர் தனது மகா மந்திரி திவான் கல்லூர் இருசப்ப ராயரை அழைத்து “இந்த பிரச்சினைக்கு அடுத்த முன்று நாட்களுக்குள் நீங்கள்தான் ஏதாவது ஒரு வழி காண வேண்டும் ராயரே, இல்லாவிடில் நமது மக்கள் போரில் அழிந்து போவார்கள். உயிரும், பொன்னும், பொருளும் இழந்து நாடே சுடுகாடாகும்,” என்று ஆலோசனையைக் கேட்டார்.

Author: admin