முத்தமிட்டு அணைத்து கொண்டிருந்தனர்

மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தும் கூட இங்கே உள்ள வாழ்க்கை முறையை பார்த்து வியந்தாலும் அவை என் வாழ்வில் எந்த தாக்கமும் இல்லாமல் தெளிவாக போய் கொண்டு இருந்தது. இங்கே நான் என் ஆராய்ச்சி வகுப்பு, லைப்ரரி மற்றும் ரிசர்ச் லேபில் பெரும்பாலும் பொழுதை கழித்து கொண்டு இருந்தேன்.
அங்கே தான் பார்வதி என்கிற பாரு வந்து சேர்ந்தாள். கேரளாவைச் சேர்ந்த தமிழ் பேசும் பெண்ணாக வந்த உடன் அறிமுகம் செய்து கொண்டாலும், ஒரே தேசம் அதுவும் சவத் இந்திய உறவு என்பதால் சின்ன புன்னகையோடு ஹாய் சொல்லி கொண்டேன். அதன் பின் அவளிடம் நான் பேச்சை தொடர வில்லை. ஆனால் பாரு என்னிடம் தினமும் ஏதாவது பேசிய படியும், பாட விளங்கங்களை கேட்ட படியும் தான் இருந்தாள்.
அதனால் எங்களுக்குள் ஒரு சுமூகமாக தோழமை உடன் ஒரு சக மாணவ உணர்வு தோன்ற ஆரம்பித்தது. சில நாட்களில் மிக சகஜமாக பழக ஆரம்பித்து விட்டோம். என் வாழ்வில் முதல் முறையாக பெண்ணோடு நட்பு கொண்டது பாரு தான். சில நேரம் பாரு தாமதமாக வந்தால் கூட செல்லில் மெசேஜ் செய்யும் அளவுக்கு நானும் தேறி விட்டேன்.
அப்போது வார விடுமுறை நாளில் நானும் பாருவும் பரபரப்பாக அன்றைக்கு முடிக்க வேண்டிய பணிகளை முடித்து விட்டு ரிலாக்ஸாக கேன்டினில் பேசி கொண்டு இருந்து போது, பாரு
“ஹே செல்வா நீயும் யுஎஸ் ல வெளியே எங்கவும் சுத்தல. நானும் துணையில்லாம பயத்துல போகல. இன்னைக்கு சிட்டிய ஒரு ரவுண்ட் அடிக்கலாமா”
நான் முதலில் தயங்கி நின்றலும் பாரு முதல் முறையாக அப்படி கேட்டதால் ஓகே சொன்னேன். இருவரும் சிட்டியில் பல இடங்களுக்கு கால் டாக்ஸி, மெட்ரோ மற்றும் கால்நடையாக பல இடங்களில் சுற்றி திரிந்தோம். நிறைய ஷாப்பிங் செய்தோம். பின்பு அவளை அவளது ஹாஸ்டலில் விடுவதற்காக சென்றேன். ஆறாவது மாடியில் தனி பிளாட் எடுத்து தங்கி இருந்தாள். அவளது ஷாப்பிங் பொருட்களை தூக்கி கொண்டு மேலே செல்வது சிரமம் என்பதால் நானும் அவளது பிளாட் வரை சென்றேன். உள்ளே நுழைந்ததும் கப் என்ற மது வாடை மூக்கை துளைத்தது. அவள் ஃபிளாட்டுக்குள் உணவு பொருட்கள் ஆங்காங்கே சிதறியும் கிடந்தது. நான் அருவெறுப்போடு பாருவைப் பார்க்க

Author: admin