உன் கணவனை உன்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள அனுமதிக்காதே

நான் ஒரு ஏழ்மையான பெண். நான் காதலித்து திருமணம் செய்து, எங்களுக்கு, ஏழு வரு டம் மிகவும் நன்றாக வே ஓடியது. ஆனால், இந்த இரண்டு மாத கால மாக என் கணவர், வேறு ஒரு பெண், அது வும் திருமணமாகி, இர ண்டு குழந்தைக்கு அம் மாவான பெண் ணுடன் தொடர்பு வைத்துள் ளார். அவள் கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். அவள் கண வர் ஊரில் இல்லாத போது, என் கணவரு டன் சேர்ந்து, தாம்பத் யம் வைத்துக் கொள்கிறாள்; அதுவும் பலமுறை.
சென்ற மாதம் அவள் வீட்டிற்கு, நான், என் குழந்தைகள் இரண்டு பேரும் சென்றோம். அப்போது, இருவரும் ஒன்றாய் இருந்ததை பார்த்தேன். இதை பற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில் லை. திடீர் என்று ஒருநாள், இருவரும் இதைபற்றி என்னிடம் சொல்லி விட்டனர். இதன் பிறகு, எனக்கு அவரை பிடிக்கவில்லை. அதை நான் பார்த்த பிறகு, தினந்தோறும் என்னுடன் தாம்பத்யம் வைக்கிறார்; அது, எனக்கு பிடிக்கவில்லை. அவள் தினந்தோறும் போன் செய்து நாங்கள் இப்படி இருந்தோம், அப்படியிருந்தோம் என்பதால், என்னுடைய மனம் மிகவும் வேதனை அடைகிறது. இவர்கள் இருவரும், தினந்தோறும் மொபைல் போனில் பேசிக் கொள்வர்.
இப்படி தெரிந்த பிறகு, எனக்கு என் கணவருடன் வாழப் பிடிக்க வில்லை. எனக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. நீங்கள் தான்நல்ல முடிவை சொல்ல வேண்டும். மூன்று வழி மட்டும் தெரியும்.

Author: admin